Friday, August 30, 2024

சிவஞானபோதம் மூன்றாம் சூத்திரம்

உளதுஇலது என்றலின் எனதுடல் என்றலின்ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படின்உண்டிவினை இன்மையின் உணர்த்த உணர்தலின்மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா

உளது-உள் பொருள் 
இலது- இல் பொருள்/இல்லாத பொருள்
என்றலின் - என்பதனால்
எனதுடல் என்றலின் - எனது உடல் என்பதனால்
ஐம்புலன்-மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் புலனுறுப்புகள்
ஒடுக்கம் - செயலற்ற நிலை
அறிதலின் -அறியப்படுவதால்
கண்படின் - தூங்கினால்
உண்டிவினை - வினைகளை உட்கொள்ளுதல்/ வினை நுகர்ச்சி
இன்மையின் - இல்லாமையால்
உணர்த்த -உணர்த்தும்போது
உணர்தலின்- உணரப்படுவதால் 
மாயா - நிலையற்ற
இயந்திர - செயற்படுகருவி
தனுவினுள் - உடம்பினுள்
ஆன்மா-உயிர் 

உள்பொருள் இல்பொருள் என்று நாம் கூறுவதால் அவ்வாறான இரண்டு பொருட்களை பற்றியும் ஆராய்ந்து அறியும் ஒன்று உள்ளது, அதுதான் ஆன்மா. 

எனதுடல் என்று எம் உடலை ஓர் உடமை பொருளாகவே கருதுகிறோம், அப்படியானால் அதை உடமை கொள்ளும் ஒன்று உள்ளது, அதுவே நான் என்னும் ஆன்மா. 

மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்புலன்களும் தனித்தனியாக அறியும் விடயங்களை ஏதோவொன்று ஒன்றுசேர்த்து தொகுத்து அறிகிறது. அப்படி தொகுத்து அறியும் ஒன்று உள்ளது அதுவே ஆன்மா. 

நாம் தூங்கும் போது புலன் உறுப்புகள் எவையும் புலநுகர்சி செய்வதில்லை. அனால் அதை உயிர் செயற்படாத மரணத்தை ஒத்த நிலை என்றும் கூற முடியாது. தூக்கம் என்பது இறந்து உயிர்க்கும் செயற்படாடு இல்லை. நாம் தூங்கும் போதும் சுவாசம் முதலான செயற்பாடுகள் நடந்துகொண்டே இருக்கிறது. சுவாசம் தான் ஆன்மா அதுதான் புலன்களை செயற்படுத்துகிறது என்று கூறவும் முடியாது. ஏனென்றால் தூங்கும் போதும் சுவாசம் நடக்கிறது. புலனுறுப்புகள் செயல்படும் நிலையில் இருந்தும் செயல்கள் உணரப்படாமல் கிடக்கிறது. எனவே புலனுறுப்புகள் வழியாக அறியும் ஒன்று உள்ளது அதுவே ஆன்மா.

பொதுவாக இந்த ஐம்புலன்கள் வழியாகவே நாம் அனைத்தையும் அறிந்து கொள்கின்றோம். ஆனால் இந்த ஐம்புலன்களுக்கும் அகப்படாத ஒன்றை பற்றி யாரோ ஒருவர் உணர்த்தும் போது எம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது 

அவ்வாறெனில் உணர்த்தினால் உணர்ந்து கொள்ளும் ஒன்று இந்த நிலையற்ற உடலில் நின்று செயற்படுகின்றது அதுவே ஆன்மா என்பது. அதுவே நான்.



No comments:

Post a Comment

சிவஞானபோதம் பதினோராம் சூத்திரம்

காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்அயரா அன்பின் அரன்கழல் செலுமே காணும் - பார்க்கும் கண்ணுக்குக் - கண்களுக்கு ...