Monday, September 9, 2024

சிவஞானபோதம் ஒன்பதாம் சூத்திரம்

 ஊனக்கண் பாசம் உணராப் பதியைஞானக் கண்ணினிற் சிந்தை நாடிஉராத்துனைத் தேர்த்து எனப் பாசம் ஒருவத்தண் நிழலாம் பதிவிதி எண்ணும் அஞ் செழுத்தே

ஊனக்கண் - குறைபாடு உடைய கண்/ மாயையை பார்க்கும் கண்
பாசம் - மாயைக்கு காரணமாக இருப்பது
உணராப் - உணராது இருக்கும்
பதியை - இறைவனை
ஞானக் கண்ணினிற் - குறைபாடு இல்லாத உண்மையை உணரும் பார்வையில்
சிந்தை - அறிவினை 
நாடி- அணுகி
உராத்து- விரைவாக 
உனைத் - உன்னை ஒரு 
தேர்த்து - சிறு துகள், மயிரிழைப் பொருள்
(தேர்த்து என்பது ஒரு நுண்ணிய அளவு முறை, மயிரிழை அளவு)
எனப் - என்று
பாசம் - ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களை
ஒருவத் - களைந்து நீக்க
தண் நிழலாம் - குளிர்ந்த நிழலான
பதி- இடம் 
விதி - விதிப்படி 
எண்ணும் - சிந்தையில் நிற்கும்
அஞ்செழுத்தே - ஐந்தெழுத்தே

எம் மானிட கண்கள் என்பது வெறும் மாயையை மட்டுமே பார்க்க கூடிய குறைபாடுடைய கண்களாகும். இந்த குறைபாடுடைய மாயக் கண்களால் உண்மையை, நாமும் நாம் இருக்கும் இந்த பிரபஞ்சங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி இருக்கும் இடமாகிய இறைவனை, அதன் இருப்பு நிலையை காண முடியாது.

அவ்வாறான இறைவனை காண்பதற்கு, குறைபாடு இல்லாத முழுமையான பார்வையுடைய அறிவுக்கண் வேண்டும். அவ்வாறான அறிவுக் கண்ணை உடையவன் உண்மையாகிய இறைவன் ஒருவனே. அவனது அறிவைப் பெற்று அவனாக நின்று அணுகினால், விரைவாக, நான் என்னும் ஆணவம் ஒரு அல்ப்பமான சிறு பொருள் என்று நீக்கப்பட்டு உண்மை உணரப்படும்.

அவ்வாறு இந்த மாயா மலங்களை ஆன்மா களைப்பின்றி களைந்து நீக்க குளிர்மை தரும் பெரு நிழலாக இருப்பது அவை உள்ளத்தில் எண்ணும் நமசிவாய என்னும் இறைவன் திருவைந்தெழுத்தே.

உடலால் ஒரு செயலைச் செய்யும் போது உடலுக்கு களைப்பு ஏற்படும். அதுபோலவே உள்ளம் ஒரு செயலைச் செய்யும் போது அதற்கும் ஒரு களைப்பு ஏற்படும். 

ஆன்மாவானது தன்னை பற்றியுள்ள மலங்களை நீக்குவது என்பது மிகவும் கடினமான செயல் என்பதை நடைமுறை வாழ்க்கையில் நாம் அனைவரும் உணர்கின்றோம். ஆனால், தூயவனாகிய இறைவனது திருநாமங்களை மனதில் இருத்திக் கொண்டு, அதனைச் செய்யும் போது உள்ளத்திற்கு உண்டாகும் அந்த பெருங்களை இல்லாமல் போய்விடும். 

அந்த இறைவனின் சிந்தனையை உள்ளம் முழுவதும் இருத்திக் கொண்டு பாசத்தை நீக்க முயற்சி செய்தால், பாசம் என்பது நீக்க முடியாத ஒரு பெரும் பொருளாக அல்லாமல், இலகுவாக நீக்கத் தக்க அல்ப்பமான ஒன்றாக ஆன்மாவிற்கு இருக்கும். 





No comments:

Post a Comment

சிவஞானபோதம் பதினோராம் சூத்திரம்

காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்அயரா அன்பின் அரன்கழல் செலுமே காணும் - பார்க்கும் கண்ணுக்குக் - கண்களுக்கு ...