விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்குஅளந்து அறிந்து அறியா ஆங்குஅவை போலத்தாம்தம் உணர்வின் தமியருள்காந்தம் கண்ட பசாசத்து அவையே
உள்ளத்து - ஆன்மாவை
மெய் - உடம்பு எனும் தொடுவுணர்வை ஏற்கும் கருவி
வாய் - சுவையுணர்வை ஏற்கும் கருவி
கண் - காட்சிகளை ஏற்கும் கருவி
மூக்கு - வாசனையை ஏற்கும் கருவி
அளந்து - ஒப்பீடு செய்து(அவ்வப்புலன்களால்)
அறிந்து அறியா - அறியமாட்டாது
ஆங்கு - அங்கே
அவை - அந்த கருவிகள் (மெய் வாய் கண் மூக்கு)
போலத்- போலவே
தாம்தம் - ஆன்மாக்கள் அவற்றின்
உணர்வின் - உணர்தலில்
தமியருள் - இறைவன் அருள்
காந்தம் கண்ட பசாசத்து - காந்தத்தின் புல எல்லைக்குள் நிற்கும் இரும்பு தன்மை போலவே
அவையே- ஆன்மாக்களே
ஆன்மா கூறியவாறே உடம்பு கண் வாய் மூக்கு என்னும் கருவிகள் செயற்பட்டு அதனால் உணரக்கூடிய விடயங்களை அறிந்து கொள்கின்றது. ஆனால் அந்த கருவிகளால் ஆன்மாவை அறிய முடிவதில்லை. அந்த புல அறிவுக்கு உட்பட்ட பொருளாகவும் அந்த ஆன்மா இருப்பதில்லை. ஐம்புலன்களுக்கு வசப்பட்டாத ஒரு பொருளாகவே ஆன்மா இயக்குகிறது.
அதுபோலவே, ஆன்மாக்களால் அறியப்படுபவை அனைத்தும் இறைவனின் அருளினாலேயே அறிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் ஆன்மாவால் அந்த இறைவனின் அருளை உணர்ந்து கொள்ள முடிவதில்லை.
காந்தத்தின் புல எல்லைக்குள் நிற்கும் இரும்பு தன்மை போலவே, இந்த ஆன்மாக்கள் அனைத்தும் இறைவனின் அருள் எல்லைக்கு உள்ளேயே இருக்கிறது.
காந்தப் புலத்தின் எல்லைக்குள் நிற்கும் இரும்பு தன்மையுள்ள ஒரு பொருள் அந்த புல எல்லைக்குளேயே இருக்கும். அதனை விலகிச் செல்லாது. காந்தம் அதனை நோக்கி ஈர்த்தது நிற்கும், அந்த இரும்புத் தன்மையுள்ள பொருள் அதனைப் பற்றி நிற்கும் புறத் தடைகளை நீக்கும் போது காந்தத்தைச் சென்று ஒட்டிக்கொள்ளும்.
அதுபோலவே ஆன்மாக்களை இறைவனின் அருளானது எப்போதும் தன்னுடன் சேர்த்துக் கொள்ள தயாராகவே இருக்கிறது. ஆனால் ஆன்மாக்கள் தாம் சார்ந்த பாச பந்தங்களினால் கட்டுண்டு கிடக்கின்றன. அவை தமது பாசத் தடைகளை நீக்கும் போது இறையருள் ஆன்மாவை ஆட்கொள்ளும்.
No comments:
Post a Comment