Saturday, October 5, 2024

சிவஞானபோதம் பதினோராம் சூத்திரம்

காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்அயரா அன்பின் அரன்கழல் செலுமே

காணும் - பார்க்கும்
கண்ணுக்குக் - கண்களுக்கு
காட்டும் - காணச் செய்கின்ற
உளம் போல்- ஆன்மா போல்
காண - பார்க்கின்ற 
உள்ளத்தை - ஆன்மாவை
கண்டு - பார்த்து
காட்டலின் - (ஆன்மாவை) பார்க்கச் செய்தலின் 
அயரா - சோர்வில்லாத
அன்பின் - அன்பினால் வெளிப்படும்
அரன் கழல் - இறைவனின் அருளானது
செலுமே - (ஆன்மாவினுள்)அதனுள் செல்லும் 

கண்களால் ஒரு காட்சி காணப்படுகிறது என்றால் அதை காண்பது ஆன்மாவே. ஆனால் கண்ணின் துணைகொண்டு ஆன்மா அந்த காட்சியை காண்கின்றது.  அதுபோல ஆன்மா தன்னை கண்டுகொள்கிறது எனில் அது இறையருளினாலேயே ஆகும். 

ஆன்மாவிற்கு காட்சியை கண்டு காட்டுவது கண்கள். ஆன்மாவிற்கு ஆன்மாவை கண்டு காட்டுவது இறையருள்.

ஆன்மா தன்னை கண்டுகொள்கிறது என்றால், அது இறை அருளாலேயே தன்னை கண்டுகொள்கிறது.

அவ்வாறு இறையருளினால் ஆன்மா தன்னை அறிந்து கொள்கிறது என்றால், ஆன்மா இறையருளைச் சார்ந்து நிற்க ஆரம்பித்துவிட்டது என்று கொள்ளவேண்டும். அந்த நிலையில் ஆன்மாவைச் சென்று இறையருள் சேர ஆரம்பித்துவிடும்.

ஏனென்றால் ஆன்மா என்பது சார்ந்ததன் தன்மையினை பெறும் இயல்புள்ளது. அதனால்தான் பாசத்தினால் கட்டுண்ட நிலையில் எதையும் உணராமல் நின்றது. 

இந்த உலக வாழ்க்கையில் இந்த புலன்களை சார்ந்து நிற்கையில் புலன்களுக்கு கட்டுப்பட்டு நின்றது. புலன் இன்பத்திற்காக கர்மங்களுக்கு ஆட்பட்டு நின்றது. 

அதுபோலவே இறையருளைச் சார்ந்தது நின்று தன்னை உணரும் போது, அது இறையருளால் வயப்பட்ட நிலைக்கு செல்லும். ஆன்மாவின் முன்னைய இயல்பு நீங்க இறையருளின் இயல்பு உட்செல்ல ஆரம்பித்தது விடும்.

ஆன்மா இறையருளைச் சார்ந்து தன்னை அறிந்து நிற்கும் போது, அந்த நிலையில் நிலைத்திருக்கும் போது, இறையருள் ஆன்மாவைச் சென்று நிரப்பிவிடும். 

அந்த நிலையில் ஆன்மாவின் இயல்பென்பது இறையருளின் இயல்பு என்பதாகிவிடும்.



சிவஞானபோதம் பத்தாம் சூத்திரம்

அவனே தானே ஆகிய அந்நெறிஏகன் ஆகி இறைபணி நிற்கமலமாயை தன்னொடு வல்வினை இன்றே

அவனே - இறைவனே
தானே ஆகிய - ஆன்மா ஆகிய
அந்நெறி - அந்த சமயத்தில்
ஏகன் ஆகி - ஒருவனான ஆகி
இறைபணி நிற்க - முற்றுணர்ந்து கர்மங்களற்று நிற்க
மலமாயை தன்னொடு - மல மாயைகளுடன் சேர்ந்து
வல்வினை இன்றே - நீங்காத கர்ம வினைகளும் இல்லாமல் போய்விடும்

உடல் என்ற மலமாயை சார்ந்து நிற்கும் ஆன்மாவின் மாயை விலகும் போது அங்கே ஆன்மா மட்டுமே எஞ்சி நிற்கும். அப்போது உடல் செயல்கள் இல்லாமல் ஆன்மாவின் செயற்பாடுகள் மட்டுமே இருக்கும்.

அதுபோலவே ஆன்மா தன் இயல்புகளை நீக்கிவிட்டால் அங்கே ஆன்மா செயற்படுவது நின்றுவிடும். இறைவனின் செயல்கள் மட்டுமே நடக்கும். 

ஒரு ஆன்மா தான் சார்ந்த மாயையில் இருந்தும், நான் என்ற ஆன்மாவின் அகங்கார நிலையில் இருந்தும் விடுபடும் போது அங்கே இறைவன் என்னும் ஒரு பொருள் மட்டுமே எஞ்சி இருக்கும். 

நான் இறைவனோடு சேர்ந்து நிற்பது,

நான் இறைவன் என்று ஆகுவது, 

நான் என்பது நீங்க அங்கு இறைவன் நிற்பது இவ்வாறு மூன்று நிலைகளைப் பற்றி பேசப்படும். இவ்வாறு ஆகுதல் அத்வைதம் எனப்படும்.

நான் இறைவனோடு சேர்ந்து நிற்பது என்றால் ஆன்மா தன் இயல்புடன் இறைவனைச் சேர்ந்து நிற்பது. 

நான் இறைவன் ஆகுவது என்றால் ஆன்மாவே இறைவனாக ஆகுவது. 

நான் என்பது நீங்க அங்கு இறைவன் நிற்பது என்றால், ஆன்மா தன் இயல்புகளை நீக்க இறைவனின் இயல்பு அதை நிரப்புதல் எனலாம். 

ஏகன் ஆகி இறைபணி நிற்க என்று இங்கே குறிப்பிடப்படுவது, ஆன்மா தன்னியல்புகளை நீக்க இறைவனின் இயல்புகள் அதை ஆட்கொண்டு நிற்றல் என்பதாகும். இந்நிலையில் ஆன்மாவின் செயற்பாடுகள் அது சார்ந்த மாயைகள் என்று அனைத்தும் நீங்கிவிடும். 

இறை நிலையின் முன்னிலையில் மாயையும் கன்மமும் இல்லை ஆணவமும் இல்லை என்னும் போது, தன்னை இழந்து இறைநிலையால் ஆட்கொள்ளப்பட்ட ஆன்மாவிற்கு அது எப்படி இருக்க முடியும். அதனால் நான் என்பது இழக்கப்படும் போது மல மாயைகளுடன் அந்த ஆன்மாவின் வினைகளும் நீங்கிவிடும்.



சிவஞானபோதம் பதினோராம் சூத்திரம்

காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்அயரா அன்பின் அரன்கழல் செலுமே காணும் - பார்க்கும் கண்ணுக்குக் - கண்களுக்கு ...